Tuesday, May 31, 2011

சமச்சீராகுமா கல்வி

தமிழக அரசின் கல்வி   முதலாளிகளுக்கு  ஆதரவான போக்கும் ,அரசு பள்ளிகளின்  அவல நிலையும்


கல்வி என்பது அனைவருக்கும் இலவசமாக கிடைக்கவேண்டும். அதுவும் தரமான கல்வியாக இருக்கவேண்டும், என்பது இன்றுள்ள அனைத்து பெற்றோர்களின் நியாயமான எதிர்பார்ப்பாகும்.  தமிழகத்தில் அரசு பள்ளிகளு கென்று தனியான பாடத்திட்டமும் ,  மெட்ரிக் பள்ளிகளுகென்று தனியான பாடத்திட்டமும்  இருக்கிறது.  அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு  கடும் போட்டி நிலவும்  வேலைச்சந்தையில்  போட்டியிடக்கூடிய  எந்த வலுவும்  தர இயலாததாக அரசு பள்ளிகளுக்கான பாடத்திட்டம் இருக்கிறது  என்பது தான் இன்றுள்ள நிலைமை.

Friday, May 20, 2011

தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க இப்படிச் செய்தாலென்ன?

தங்கள் பிள்ளைகளின் வளமான எதிர்காலம் பற்றிய கனவிலிருக்கும் பெற்றோர்களை அட்டையாய் உறிஞ்சும் தனியார் பள்ளி முதலாளிகளின் கட்டணக் கொள்ளை நாடறிந்ததே. பத்தாண்டுகாலமாக இக்கட்டணக் கொள்ளை அரசின் காதிலேயே விழாமல் இருந்தது. தாங்கமுடியாத கட்டணச் சுமையால் நிதானமிழந்த சில பெற்றோர்கள் ஆங்காங்கே கலகங்களில் ஈடுபடுவதும்; பின்னர் காவல்துறையினரால் ஏமாற்றி - மன்னிக்கவும் சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கப் படுவதும் வாடிக்கையான ஒன்றாகிக் கொண்டிருந்தது.

Monday, March 21, 2011

அமெரிக்கன் கல்லூரி ஆசிரியர் - மாணவர் போராட்டமும்

அதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியமும்

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பெரும்பாலான ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்புகளுக்குச் செல்ல முடியாத சூழல் கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதலில் பிரச்னை உருவான போது அதில் பகத்சிங் மாணவர் இளைஞர் கூட்டமைப்பு என்ற பெயரில் கல்லூரியின் மாணவர் மற்றும் கல்வி நலனுக்காக நாங்கள் போராடினோம். அந்த அடிப்படையில் தற்போது கல்வியின் பால் அக்கறை கொண்ட மதுரை மக்களின் மனதில் இருப்பதாக நாங்கள் உணரும் சில கேள்விகளுக்கான பதில்களை முன்வைப்பது இது குறித்து நிலவும் குழப்ப நிலையை அகற்ற உதவும் என்று கருதி அக்கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் முன் வைக்கிறோம்.

தற்போதைய அமெரிக்கன் கல்லூரிப் பிரச்னை என்ன? அதற்குக் காரணம் யார்?
 மதுரை ராமநாதபுரம் திருமண்டிலப் பேராயர் தலைமையில் இயங்கும் ஆட்சிமன்றக் குழுவினால் நியமிக்கப்பட்ட ஒருவர் தற்போது கல்லூரி முதல்வராக இருப்பதே தற்போதைய அமெரிக்கன் கல்லூரியின் பிரச்னை. இப்பிரச்னை உருவாகக் காரணம் இந்த  நியமனத்திற்குத்  தமிழ் நாட்டின்  கல்லூரிக் கல்வி இயக்குனரகம் அளித்துள்ள தவறான ஒப்புதலே.

Friday, March 11, 2011

கல்வியின் பால் அக்கறை கொண்ட மக்களின் பிரச்னையாக மாற்றப் படாமல் அமெரிக்கன் கல்லூரி பிரச்னைக்குத் தீர்வு இல்லை

மீண்டும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதாவது ஏற்கனவே தலைதூக்கி இடையில் நீதிமன்றத் தீர்ப்பினால் மட்டுப்பட்டிருந்த கல்லூரியை மதவாதிகள் கையகப்படுத்தும் பிரச்னை மீண்டும் தலை தூக்கியுள்ளது. கல்லூரியின் முன்னாள் முதல்வர் சின்னராஜ் ஜோசப் ஜெயக்குமார் அவர்களைச் செயலராகக் கொண்ட ஆட்சிமன்றக் குழு, மதுரை ராமநாதபுரம் மண்டிலப் பேராயரைத் தலைவராகக் கொண்ட ஆட்சிமன்றக்குழு என இரண்டு ஆட்சிமன்றக் குழுக்கள் தற்போதும் தாங்களே உண்மையான ஆட்சிமன்றக் குழுக்களெனக் கூறிக் கொண்டுள்ளன. அது குறித்த கேள்வி நீதிமன்றத்தில் கிடப்பில் இருக்கிறது. அந்நிலையில் பேராயர் தலைமையிலான ஆட்சிமன்றக் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரைக் கல்லூரியின் பொறுப்பு முதல்வர் என்று கல்லூரிக் கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். அதனை ஒட்டியே இப்பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.
ஒரு பிரச்னை குறித்த நீதிமன்றத் தீர்ப்பு வராத நிலையில் கல்லூரிக் கல்வித்துறை இயக்குனரகம் எப்படி இந்த அறிவிப்பினைச் செய்தது என்பதே ஒரு ஆச்சரியமான வி­யம். அநேகமாக சிறுபான்மையினர் உரிமை என்ற பெயரில் நிலவுவதும் பல சமயங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமான கண்ணோட்டம் பேராயருக்குத் தெரிந்த வெறெந்தக் கைவந்த கலையும் இடைத் தலையீடு செய்யாதிருந்திருக்கும் பட்சத்தில் அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.

Thursday, February 24, 2011

அமெரிக்கன் கல்லூரி நிர்வாக குளறுபடிகளினால் மாணவர்கள் தவிப்பு !

கடந்த ஆண்டு  மதுரை அமெரிக்கன் மாணவர்களின் கடும் போராட்டங்களினால் அக்கல்லூரியில் தான்தோன்றி தனமாக கோலோச்சி கொண்டிருந்த பிஷப்பின் அதிகாரம் அடக்கப்பட்டது. உயர் நீதி மன்ற தீர்ப்பின்படி கல்லூரியில் இயல்பான நடைமுறை திரும்பியது. தற்போது திரும்பவும்  பிஷப்பிற்கும்  , முதல்வருக்குமான பணிப்போரினால்  கல்லூரியின் இயல்பான நடைமுறை  பாதிக்கப்பட்டு மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் அரசு உடனடியாக தலையிட்டு கல்லூரி நிர்வாகத்தை தனது பொறுப்பில் எடுத்து மாணவர்களின் தடையில்லாத கல்விக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பஸ் டே என்ற பெயரில் மாணவர்கள் அரங்கேற்றும் பாசிச கலாச்சாரம்

இன்று சென்னை கலை கல்லூரி மாணவர்கள் பஸ் டே என்று ஒரு பேருந்தை வாடகைக்கு அமர்த்தியோ அல்லது பஸ்ஸை வழிமறித்து  அதில் உள்ள பயணிகளை  இறக்கி விட்டு விட்டு அந்த பேருந்தை ஊர்வலமாக  அழைத்து  செல்கின்றனர்  அப்போது ஏற்கனவே கடும் போக்குவரத்து நேர்சலில் சிக்கி தவிக்கும்     சென்னை  மக்கள் இந்த வேண்டாத  செயலால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒரு முன்னேறிய சென்னை போன்ற பெரு நகரத்தில் இவ்வாறு பொது மக்கள் அவதிக்குலாக்கப்படுவது கண்டிக்கத்தக்கதாகும்.  
மாணவர்களுக்கு பணஉதவி போன்றவை ஆளும், எதிர் கட்சிகள் தரப்பில் தரப்படுகிறது. ஆளும் அரசும் இதை கண்டும் காணாமலும்  கண்ணை  மூடிக்கொண்டுள்ளது. அப்போது தெருவில் போகும் பெண்களை  கேலி செய்வது அந்த பெண்களை மானபங்கபடுத்தும் செயலையும் இந்த மாணவர்கள் அரகேற்றுகின்றனர். இது மாணவர்கள் மீது மக்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்தும். மாணவர்கள் பகத்சிங் போல இருக்க வேண்டுமே ஒழிய கருணாநிதி போல அல்ல.